தேவ குமாரர் என்பதற்கு தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள், தேவ பிள்ளைகள் எனவும் அர்த்தம் கொள்ளலாம். வேத பண்டிதர்கள் இதை தள்ளப்பட்ட தூதர்கள், சேத் வம்சம் என இரு விதமாக கூறியுள்ளனர். ஆனால் லூக்கா 20:34-36 ல் அவர்களுக்கு கொள்வினை கொடுப்பினையில்லை என்று இயேசு சொன்ன விளக்கங்களை சிந்தித்தால் அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்க வழியில்லை ஆகவே அவர்கள் சேத்தின் புத்திரராகவே எடுத்து கொள்ளலாம்.