General Category > Tamil Bible

இறந்தவர்கள் எங்கிருக்கிறார்கள்?

(1/3) > >>

Vickyalpha:
வேதத்தின்படி இதுவரை இறந்தவர்கள் என்ன ஆனார்கள் ??
எங்கே இருக்கிறார்கள்?

udaya:
பரதீஸில் .......

கள்ளனைப் பார்த்து இன்று என்னுடனேகூடப் பரதீசியிலிருப்பாய் என்று ,இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய வாக்கியம் ஞாபகத்துக்கு வரும் என்று நினைக்கின்றேன்

Vickyalpha:
அப்படியானால்
1. "ஆண்டவர் வருகையின் போது இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருப்பார்கள்" என்று எழுதியிருக்கிறதே. அப்படியானால் அவர்கள் யார்?

2. "நியாயத்தீர்ப்பு நாளின் போது, இதுவரை இறந்துபோனவர்கள் தேவனுக்கு முன்பாக நிற்பார்கள், அப்போது தேவன் அவர்களை நியாயம் தீர்த்து பரலோகத்திற்கும், நரகத்திற்கும் அனுப்புவார்" என்றால் , இப்போது நியாயத்தீர்ப்பு நடந்து விட்டதா? இனிமேல் தான் நடக்கும் என்றால் இப்போது இறந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள்?

udaya:
இது குறித்து நான் கேள்விப்பட்டது இதுதான்.
ஒருவன் இறக்கும் பொழுது அவனது உடல் மண்ணோடு மண்ணாக கலந்து மக்கிவிடும் .
ஆனால் அவனது ஆத்மா பரதீசு சென்று அடைந்து விடும் .
பரதீசு என்பது பரலோகம் அல்ல .
இடைப்பட்ட ஒரு இடம். 
அதாவது ஆத்துமாக்கள் இளைப்பாறும் இடம்.
நியாயத்தீர்ப்பின் நாளில் பூமியிலுள்ள இறந்தவர்களின் உடல் உயிர்ப்பிக்கப்படும். அதே சமயத்தில் அவர்களது ஆத்மா பரதீசில் இருந்து அந்தந்த உடலுக்குச் சென்று விடும் .
அதன்பின்பு அவர்கள் நியாயாதிபதியின் முன் நிறுத்தப்படுவர்.
அதேபோன்று பூமியில் உயிரோடு இருப்பவர் களும் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு நியாயாதிபதியின் முன் நிறுத்தப்படுவார்கள் .
பிறகு நியாயம் விசாரிக்கப்பட்டு அவரவர்தம் கிரியைகளுக்கு ஏற்ப பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுவர்.

ஒன்று சொல்ல வேண்டியதிருக்கிறது. கிறித்தவ கோட்பாடுகள் , நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கின்றது.
ஒரு பெரிய மீனின் வயிற்றில் யோனா மூன்று நாள் இருந்தான் என்று இருப்பதற்கு பதிலாக , யோனாவின் வயிற்றில் பெரிய மீன் மூன்று நாளாக இருந்தது என்று எழுதி இருந்தாலும் அதை நம்ப வேண்டும். அதற்குப் பெயர்தான் கிறித்தவ விசுவாசம். இறந்தவர்களை குறித்த விஷயங்களை நம்புவதற்கு இப்படிப்பட்ட ஒரு ஆழ்ந்த விசுவாசம் தேவை.

துரைசிங்:
பரதீஸ், பரலோகம், இளைப்பாறும் இடம், நரகம், நியாயத்தீர்ப்பு, உயிரத்தழுப்பப்படுவது , நியாயாதிபதிமுன்நிற்பது(எங்கே பூமியிலா பரதீஸிலா, பரலோகதததிலா)இப்படி இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று விவாதிக்கும்போது ஆதாரமாக வசனத்தை சுட்டி காட்டினால் கடவுள் முன்னிலையில் விவாதிப்பது ஆகும். கடவுள் வழிநடத்துதல் கிடைக்கும்.  வெறும் மனித ஞானம் சாவு, உயிர், நிலை வாழ்வு போன்ற கடவுளின் இறுதி நிலைப்பாட்டை தெரிவிக்காது.  எல்லா கேள்விக்கும் திருவிவிலியத்தில் பதில் இருக்கு.பரதீஸ் இயேசு கள்வனிடம் பேசும் போது குறிப்பிட்டது. சூப்பர் பிரதர்.  Park,. Park like garden இது தரும் அர்த்தம் தான் பரதீஸ் கிரீக் pa- ra'- del- sos  எபிரேயு Par- des. வசனங்கள் லூக்கா 23:43,. 2 கொரிந்தியர் 12:4 திருவெளிப்பாடு 2:7 ‌‌‌‌‌‌ஆதியாகமம் 2:8,9,15 ‌‌‌வெளிப்படுத்தல் 2:7 பரலோகத்தில் கடவுள் இடத்தில் உள்ள பரதீஸை குறிக்கிறது.  Park like garden அது ஏதேன் தோட்டத்தை குறிக்கிறது.பூமி இயேசு கிறிஸ்துவின் அரசாட்சியில் பூஞ்சோலை ஆகும்.  மத்தேயு 6:10. ‌‌‌‌‌‌‌‌அதனால பரதீஸ் பூமியில் இருக்கு. இயேசு உயிரத்தெழ 3 நாளாச்சு .பரலோகம் போக 40 நாள் ஆச்சு வசனம் லூக்கா 24:7 அப்போஸ்தலர் 1:3 .அப்போ கள்வனின் கதி?லாசரு இறந்து 4 நாள் பரலோகத்தில் இருந்தாரா? கடவுளுடைய பரலோக பரதீஸில் இருந்திருந்தால் அங்கிருந்து வலுக்கட்டாயமாக திரும்ப பூமிக்கு இழுத்து வருவது அன்பான செயல் இல்லை.அப்ப தலைப்பு படி இறந்த லாசர் எங்கே இருந்தார்? என்ன நிலையில் இருந்தார்?இறந்தவர்கள் நிலையை கடவுளுடைய திருவிவிலியம் என்ன சொல்லுது பிரசங்கி 9:5,6,10 சங்கீதம் 146:3,4 ‌‌‌‌‌‌‌‌இறந்தால் யோசனை இல்லை, எதுவும் தெரியாது ன்னு திரு விவிலியம் சொல்லுது யோனா 3 நாள் மீன் வயிற்றில் சாகவில்லை. யோனா வை போல் இயேசு 3 நாள் பூமியின் வயிற்றில் செத்து போயி. வசனங்கள் யோனா 2:2 மத்தேயு 12:40 இப்ப இரண்டு பேரும் இருந்த இடம் தொரிந்து விட்டது எபிரேயுவில் அதை சொல்லும் வார்த்தை ஷியோல் அப்படின்னா மொழி பெயர்ந்தவர்கள் ஷியோலை மீன் வயிறு, பூமியில் கல்லறைகள் எதை சொன்னாங்க. நாம என்ன விளங்கி இருக்கிறோம்.ஆதாம் சாவு கடவுள் சொல்ல வருவது என்ன? ஆதாம் ஓய்வு நாளுக்கு முந்தைய நாள் ( வியாழக்கிழமை சூரிய மறைவு வெள்ளிக்கிழமை சூரிய மறைவு ) 6 வது நாளில் படைத்தார்.5 ம்நாளில் அதுக்கு முன்னாடி நாளில் ஆவியா, ஆத்துமா வா இல்லை வேறு எந்த வகையாகவோ இல்லை.  கடவுள் பூமியின் மூலக்கூறுகள் ( மண்ணில்) செஞ்சு விட்டார் இப்ப ஆதாமுக்கு என்ன பேரு. இன்னும் உயிர் கொடுக்கல. அவன் ஆவியா? ஆத்துமா வா? வெறும் பூமியின் மூலக்கூறு. கடவுள் உயிர்மூச்சை தந்தால் அது இயங்கும். இல்லன்னா மன் பொம்மையாக இருக்கும். ஆதியாகமம் 2:19 ஆதாம் ஜீவாத்துமா ஆனார் ( ஜீவிக்கும்) கடவுள் கட்டளையை மீறினால் பதவி உயர்வு கிடைச்சு நரகம், பரலோகம், மோட்சம், வெயிட்டிங் ஹால் எதுவும் கடவுள் ஐடியா இல்லை. ஜீவிக்கும் ஆத்துமா ஜீவசவாசத்தை கடவுள் திரும்ப வாங்கிட்டா திரும்பவும் மண்ணாங்கட்டி தான்.
அப்ப இறந்தா எங்க இருக்காங்க?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version