Author Topic: தீர்க்கதரிசனங்கள்  (Read 3717 times)

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #15 on: October 18, 2018, 08:19:54 AM »

Reply#6 ல் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் இலக்கணங்களோடு பொருந்துகிற மாதிரி  உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்துடன் , தீர்க்கதரிசன விவாதத்தை துவக்குகிறேன் .

தாவீதுக்கு சொல்லப்பட்ட ஒன்று .

2 சாமுவேல் : 12
11 கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.

மேலே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் கீழே சொல்லப்பட்டபடி நிறைவேறுகிறது.

2 சாமுவேல் : 16
22 அப்படியே அப்சலேமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள். அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.

முதலில் , இந்த தீர்க்கதரிசனத்தை எடுத்துக்கொண்டதற்கு மன்னிக்கவும். சொல்லப்பட்ட விஷயம் நல்ல விஷயமாக இல்லையென்றாலும் இதை எடுத்துக்கொண்டதற்கு காரணம் , இது துல்லியமாக , திருஷ்டிராந்திரமின்றி ,  நிறைவேறிய ஒரு தீர்க்கதரிசனம் .

perfect example to " unambiguous fulfilled prophecy ".

******************************************************************
அடுத்து ஆபிரகாமுக்கு சொல்லப்பட்ட ஒன்று .

ஆதியாகமம் : 22
17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

இந்த தீர்க்கதரிசனத்தில் விசேஷம் என்னவென்றால் , கர்ததரின் வாக்குத்தத்தமும் இதில் அடங்கியிருப்பதுதான் .

இது Prophecies being fullfilled ரகம் .

*******************************************************************
அடுத்து Prophecies yet to be fullfilled ரகம் .

ஏசாயா : 2
4 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார், அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள், ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை
மீகா : 4
3 அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறு ஜாதி பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

மேற்கண்ட தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறுமென்று தெரியவில்லை .

ஆனால்..............

லூக்கா : 21
10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்,ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.

நிறைவேறுமாவென்று தெரியவில்லை .

இப்படி நினைக்க காரணம் உண்டு .

மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? ..........என்று வசனம் இருந்தாலும் , மனம்மாறி சொன்னதை செய்யாததிருந்த தருணங்களும் உண்டு.

யோனா : 3
1 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: 2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். 3 யோனா எழுந்து கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான். நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது 4 யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம் என்று கூறினான்.

10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

எனவே , ஒருவேளை நாமெல்லாம் மனந்திரும்பினால் அனைத்து தீர்க்கதரிசனங்களையும் அவர் cancel செய்ய வாய்ப்பிருக்கிறது . Cheer up.

***********************************************************************************

கடைசியாக Failed prophecies

ஏசாயா : 7
14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

இவ்வசனம் இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கருதினால் அது Failed prophecy ......இல்லையென்று கருதினால் அது yet to be fullfilled prophecy

Failed prophecy என்கிற பதம் மனதிற்கு சஞ்சலமாக இருக்குமானால் " Apparently Failed prophecy " என்று வைத்துக்கொள்ளவும் .

**********************************************************************************

......................................முதல் சுற்று நிறைவு .

Stephen selvam

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #16 on: October 18, 2018, 10:49:40 AM »
Neengal sonna mudhal irandu pirivugaluku ippdhaiku adhu podhum endru ninaikkiren.

Moondravadhu ondru solli irundheergal,.

Answer is Yes. It will happen or being happened.

Jonah vin kaariyathai kurithu solli irundheergal. Adhil ulladhey 4 adhikarangal than. Adhu migavum elimaiyaga puriya koodiyadhum kooda.

Amam. Aandavar Jonah vai ninivey pattanadhuku anuppugirar. Edharku endru koorungal..

4Th Failed prophecies.

Yesuvin pirappu engu poi aanadhu.
Andru rathiriyil thoodhan avargaluku thondri sonnadhai than avargai seidhargal.. melum Immanuel enbadharkana artham Devan nammodu irukkirar. Adharkagavey isaiahvil ippadi solla pattu irukkum. Avar nammodu irukkirar enbadharku.

Adhuvum illamal, prophecies neraya nerangalil indirect agavey kodukkapadugiradhu. Adhai purindhu kollum alavirku, oru saadharana makkaluku alladhu visuvasigalukku iyalamal pogalam.

Neengal sonna visayathil irandu theerkadharisanangal niriveriyadhagavey nan karudhigiren.

Ondru Isaiah vil sollapattadhu.
Innondru andru raathiriyil thoodhan avargalukku sonnadhu..

Devan nammodu irundhar. Avarukku Yesu peyarittanar.



udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #17 on: October 18, 2018, 01:33:01 PM »
@:Aandavar Jonah vai ninivey pattanadhuku anuppugirar. Edharku endru koorungal..

நினிவேக்கு விரோதமாக பிரசிங்கம் செய்ய.



இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் - prophecy

பெயரிட்டார்களா ? - இல்லை.

Prophecy failed. It is that much simple.

யோசேப்பு பார்வோனுக்கு அரத்தம் சொன்ன மாதிரி, இந்த தீர்க்கதரிசனத்தில் , புரியாதது என்ன இருக்கிறது ? மறைமுக அர்த்தம் என்ன இருக்கிறது ?

Chandruparkulan

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #18 on: October 18, 2018, 06:36:17 PM »
இந்த கேள்விக்கு கூட கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் எனும் நிகழ்ச்சியில் பதில் உண்டு. Brother Udaya.. இதை எங்களால் விளக்க முடியும். நேரம் ஆகிரதினால் கொஞ்சம் கடினம். அங்கு நேர்முகமாய் பேசுவார்கள் உங்களுக்கு எளிதாக புரியும். இம்மானுவேல் failed prophecy அல்ல. அது நிறைவேறிய தீர்க்கதரிசனம்.

Stephen selvam

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #19 on: October 18, 2018, 10:50:07 PM »
@Repky 18...

Seri... Edharku andha prasangam?...

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #20 on: October 19, 2018, 08:52:05 PM »
என்ன சகோ....பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்?

Stephen selvam

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #21 on: October 19, 2018, 10:27:08 PM »
Illai na.. ungalukku Prasangam edukkara alavukkulam naan oru Periya aalu illana...

Edharku andha prasangam endru andha boothagathin kadaisi irandu vasanangalil irukkum endru ninaikkaren na...

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #22 on: October 20, 2018, 12:49:51 AM »
கர்த்தர் , தாம்  உரைத்ததை செய்யாமல் போவதற்கு வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டவே யோனா episode ஐ உதாரணம் காட்டினேன். அதாவது நிறைவேறும் என்று நாம் எதிர்பார்க்கும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமலே போகலாம் என்பதுதான் அதன் பொருள் .
கடவுள்  இரக்கப்பட்டு நம்மை தண்டிக்காமல் போகலாம் என்று கூறி இருந்தேன்

யோனா கதை வேற லெவல்ல விவாதிக்க வேண்டிய ஒன்று.

அதை இந்த தலைப்பில் செய்வது சரியாகாது.
« Last Edit: October 20, 2018, 12:54:37 AM by udaya »

Stephen selvam

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #23 on: October 22, 2018, 12:22:29 AM »
S exactly.. But that's not a failured prophecy only if the people of ninivey did not repent and God did not destroy the city...

We may take it as abandoned prophecy or aborted...

Stephen selvam

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #24 on: October 22, 2018, 12:30:36 AM »
And that comes with certain terms..

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #25 on: October 22, 2018, 06:33:30 AM »
@:We may take it as abandoned prophecy or aborted...

Prophecy was neither abandoned nor aborted .
Surly , it was said.
Just its Content was not executed.

Stephen selvam

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #26 on: October 22, 2018, 06:37:44 AM »
With respect to the terms given......

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #27 on: October 25, 2018, 07:08:03 AM »
தீர்க்கதரிசனங்கள் பகுதி 2

" இம்மானுவேல் " என்பது இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கருதினால் அது நிறைவேறத் தவறிய தீர்க்கதரிசனம் என்று இவ்விவாதத்தின் முதல்பகுதியில் ( Reply#16 )குறிப்பிட்டிருந்தேன் .
பெரும்பாலானோர் , " இம்மானுவேல் " என்பது இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கருதுகிறார்கள் .  மேலும் அது நிறைவேறிய தீர்க்கதரிசனம் என்றும் கருதுகிறார்கள் .
காரணம் , அது மத்தேயு நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதால்தான்  அவ்வாறு நினைக்கின்றனர் .

மத்தேயு நூலின் ஆசிரியருக்கு , பழைய ஏற்பாட்டில் உரைக்கப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களை " நிறைவேறியதாக " காட்டுவதில் ஒரு அதீத முனைப்பு இருப்பதை காணமுடியும் .
இடம் பொருள் ஏவல்  என்று எதைப்பற்றியும் பற்றி கவலைப்படாமல் , எப்படியாவது , எங்கேயாவது  அதை பதிவிட்டு விடுவார் .
எந்த தீர்க்கதரிசி அதை கூறினார் என்பதைக்கூட கவனிக்காமல் பதிவிட்டு விடுவார் .
" இம்மானுவேல் " பற்றிய தீர்க்கதரிசனத்தை அவர் எழுதியிருக்கும் இடத்தைப் பார்த்தாலே அவரது " முனைப்பு " நன்கு விளங்கும் .
மத்தேயு 1 : 23 ல் இது சொல்லப்பட்டிருக்கிறது . இப்பகுதியை வாசித்துப் பார்த்தால் , எடுத்த எடுப்பிலேயே கூறிவிட முடியும் இது ஒரு இடைச்செருகலென்று .
தீர்க்கதரிசனம் மத்தேயு 1 : 22 ல் நிறைவடைகிறது . ஆனாலும் ஒரு நீட்டிப்பைக் கொடுத்து " இம்மானுவேல் " பற்றிய கருத்தை பதிவிடுகிறார் .
25 ம் வசனத்திலேயே இயேசு என்று பெயரிட்டதை அவரே உறுதிப்படுத்தியும் விட்டார் . அப்புறம் எதற்கு " இம்மானுவேல் " பற்றிய தீர்க்கதரிசன நிறைவேற்றம் ?
மத்தேயு 1 : 23 ஐ mute செய்து இப்பகுதியை வாசித்தால் எல்லாம் சரியாக தெரியும் .

" இம்மானுவேல் " என்பது இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கருதாவிட்டலும் , அதாவது இத்தீர்க்கதரிசனம் இன்னும் நிறைவேறாத ஒன்று வைத்துக்கொண்டாலும் , அதுவும் பிரச்சனைதான் .
ஏசாயா : 7 :14 தீர்க்கதரிசனம் எப்போதுதாவது நிறைவேறினால் இன்னொரு " கன்னியின் மைந்தன் " உதித்து விடுவார் !
எனவே இநத தீர்க்கதரிசனம் நிறைவேறிவிடக் கூடாத ஒன்றாகும் .

அடுத்து............

மத்தேயுவில் கூறப்பட்டிருககும் இன்னொரு " தீர்க்கதரிசன நிறைவேற்றம் " இது .

ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.  மத்தேயு 2 :15

ஓசியா 11 : 1 ல் உரைக்கப்பட்டிருககும் தீர்க்கதரிசனத்தைத்தான் இங்கு குறிப்பிடுகிறார் .

இது நிறைவேறியதாக காட்டவேண்டுமென்பதற்காக மத்தேயு 2 :13 - 15 ல் ஒரு நிகழ்வை பதிவிடுகிறார் . யோசேப்பு , மரியாள் ஆகிய இருவரும் குழந்தைுடன் எகிப்துக்கு ஓடியதாகவும் பின்பு சில காலம் கழித்து திரும்பியதாகவும் கூறுகிறார் . இது சந்தேதகத்திற்கு இடமான ஒன்று .

காரணம் , " எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த " லூக்கா இவ்விஷயத்தில் வேறுபடுகிறார் .

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
லூக்கா 2 : 21 .
தொடர்ந்து அவ்வமயத்தின்போது நடந்தவற்றை லூக்கா 2 : 21 - 33 வரையிலுள்ள வசனங்களில் விவரிக்கிறார் .

மத்தேயு 2 : 16 ல் கூறப்பட்டிருக்கும் செய்தி உண்மை எனில் குழந்தை இயேசு எப்படி ஏரோதின் கைகளிலிருந்து தபபினார் ? ஒருவேளை பெயர் சூட்டிவிட்டு எகிப்துக்கு தபபிச் சென்றார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை .    லூக்கா 2 : 39 ல் அவர்கள் நாசரேத்துககு திரும்பி சென்றதாக கூறப்பட்டிருககிறது . எந்த பிரச்சனையும் இல்லை . சர்வ சாதாரணமாக சென்றுவிட்டதுபோலத்தான் தெரிகிறது . மேலும் ஏராளமான பச்சிளங்குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால் அது ஒரு வரலாற்று நிகழ்வாகவே கருதவேண்டியுள்ளது . அழுகையும் கூக்குரலும் மிகுந்த இப்படி ஒரு நிகழ்வு , " எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததாக "  கூறும் லூக்கா நூலின் ஆசிரியரின் கவனத்திற்கு வராமல் போயிருக்காது .

மேலும்............

நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது
.....என்று மத்தேயு 2 : 23 குறிப்பிடுகிறது . இது எந்த  ஒரு தீர்க்கதரிசியும் உரைத்ததாக தெரியவில்லை .

எனவே , எகிப்துக்கு ஓடிவிட்டதாக மத்தேயு கூறுவது தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்காகத்தான் என்று தெரிகிறது .

அடுத்து............

மத்தேயுவில் கூறப்பட்டிருககும் மற்றுமொரு " தீர்க்கதரிசன நிறைவேற்றம் " இது .

மத்தேயு 27
9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

எரேமியா தீர்க்கதரிசி எப்போது இதை சொன்னார் ?
சகரியா  11 : 12 , 13  வசனங்களில்தான் இந்த மாதிரி ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது .

சகரியா  11 :
12 உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள். இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன். அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
13 கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார். இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு. நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்து விட்டேன்.

எனவே மத்தேயு கூறும் பெரும்பாலான தீர்க்கதரிசன நிறைவேற்றங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது .


Arasi Aruldas

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #28 on: October 25, 2018, 12:17:58 PM »
Ex:  Nee aseervadhamaga irrupai yendru karthar theerka tharisanam sonnar yentru vaithu kolluvom
1.udaney adhu nadaka vendiyadhu illayae
2.2/3 varudangal agalam
3.1 year mattum aseervadhamaga
    Vazhdhu vittu  pinbu kartharai vittu vilaki     
    Vittal aseervadham sabamaga    kudamaralam
4. Vesuvasithal needhimanai pizhaipaai
5.karthar sonnal adhu nadakum

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #29 on: October 26, 2018, 06:49:28 AM »
@:Nee aseervadhamaga irrupai yendru karthar theerka tharisanam sonnar yentru vaithu kolluvom
சரி....வைத்துக்கொள்வோம்.

@:udaney adhu nadaka vendiyadhu illayae
உடனே நடக்கும் என்று சொல்லமுடியாதுதான்.

@:2/3 varudangal agalam
3/4 வருடங்கள் கூட ஆகட்டுமே......அவசர படக்கூடாது என்பதையும் ஏற்கலாம்.

@:1 year mattum aseervadhamaga Vazhdhu vittu  pinbu kartharai vittu vilaki Vittal aseervadham sabamaga kudamaralam
மிகச்சரியாக சொல்லிவிட்டீர்கள் . ஆபிரகாம் விஷயத்தில் இப்படித்தான் நடந்தது .  வானத்து நட்சத்திரங்களைப் போலவும் , கடற்கரை மணலைப்போலவும்  உன்னை பலுகி
பெருகப்பண்ணுவேன் , என்ற வார்த்தை அன்று ஆசீர்வாதம்...இன்று அது ஒரு சாபம் . பெருகிவரும் மக்கள் தொகை என்பது நிச்சயமாக சாபம்தான் .

@:Vesuvasithal needhimanai pizhaipaai
விசுவாசிக்கும்படி காரியங்களைப்பற்றி கூறினால் நல்லது என்று எண்ணுகிறேன் .

@:karthar sonnal adhu nadakum
நடக்கும்தான்...........ஆனால் நடந்துவிட்டதாக எதையாவது கூறுவதுதான் பிரச்சனை .