Reply#6 ல் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் இலக்கணங்களோடு பொருந்துகிற மாதிரி உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்துடன் , தீர்க்கதரிசன விவாதத்தை துவக்குகிறேன் .
தாவீதுக்கு சொல்லப்பட்ட ஒன்று .
2 சாமுவேல் : 12
11 கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.
மேலே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் கீழே சொல்லப்பட்டபடி நிறைவேறுகிறது.
2 சாமுவேல் : 16
22 அப்படியே அப்சலேமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள். அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.
முதலில் , இந்த தீர்க்கதரிசனத்தை எடுத்துக்கொண்டதற்கு மன்னிக்கவும். சொல்லப்பட்ட விஷயம் நல்ல விஷயமாக இல்லையென்றாலும் இதை எடுத்துக்கொண்டதற்கு காரணம் , இது துல்லியமாக , திருஷ்டிராந்திரமின்றி , நிறைவேறிய ஒரு தீர்க்கதரிசனம் .
perfect example to " unambiguous fulfilled prophecy ".
******************************************************************
அடுத்து ஆபிரகாமுக்கு சொல்லப்பட்ட ஒன்று .
ஆதியாகமம் : 22
17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
இந்த தீர்க்கதரிசனத்தில் விசேஷம் என்னவென்றால் , கர்ததரின் வாக்குத்தத்தமும் இதில் அடங்கியிருப்பதுதான் .
இது Prophecies being fullfilled ரகம் .
*******************************************************************
அடுத்து Prophecies yet to be fullfilled ரகம் .
ஏசாயா : 2
4 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார், அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள், ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை
மீகா : 4
3 அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறு ஜாதி பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
மேற்கண்ட தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறுமென்று தெரியவில்லை .
ஆனால்..............
லூக்கா : 21
10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்,ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
நிறைவேறுமாவென்று தெரியவில்லை .
இப்படி நினைக்க காரணம் உண்டு .
மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? ..........என்று வசனம் இருந்தாலும் , மனம்மாறி சொன்னதை செய்யாததிருந்த தருணங்களும் உண்டு.
யோனா : 3
1 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: 2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். 3 யோனா எழுந்து கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான். நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது 4 யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம் என்று கூறினான்.
10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
எனவே , ஒருவேளை நாமெல்லாம் மனந்திரும்பினால் அனைத்து தீர்க்கதரிசனங்களையும் அவர் cancel செய்ய வாய்ப்பிருக்கிறது . Cheer up.
***********************************************************************************
கடைசியாக Failed prophecies
ஏசாயா : 7
14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
இவ்வசனம் இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கருதினால் அது Failed prophecy ......இல்லையென்று கருதினால் அது yet to be fullfilled prophecy
Failed prophecy என்கிற பதம் மனதிற்கு சஞ்சலமாக இருக்குமானால் " Apparently Failed prophecy " என்று வைத்துக்கொள்ளவும் .
**********************************************************************************
......................................முதல் சுற்று நிறைவு .