தேவனாகிய கர்த்தர் , தான் ஒருவர்தான் கடவுள் என்று ஆணித்தரமாக கூறுகிறார் .
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
ஏசாயா 45 :5
தேவனாகிய கர்த்தர் , தான் ஒருவராக இந்த பிரபஞ்சத்தை படைத்ததாக கூறுகிறார் .
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
ஏசாயா 44 :24
தேவனாகிய கர்த்தர் , தனக்கு நிகர் யாருமில்லை என்கிறார் .
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46 :9
தேவனாகிய கர்த்தர் , தன்னை தவிர வேறு ரட்சகர் இல்லை என்கிறார் .
நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
ஏசாயா 43 :11
சுருக்கமாக சொல்லப்போனால் , மேற்கூறிய வசனங்கள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை செல்லாத்தாக ஆக்கிவிடுகின்றன . அவர் கடவுள் இல்லை , ரட்சகர் இல்லை என்ற அளவிற்கு ஆணித்தரமாக கூறுகின்றன .
பரிசுத்த ஆவியின் வரம்பெற்றோர் யாராவது இருப்பின் , இதை விளக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி.