#franklin
அப்படி இல்லை. ஒருவர் தன் ஜாதி பெயரை பின்னால் பெருமையாக போட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால், அவர் ஜாதி முறைகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம். ஜாதி முறைகளை ஏற்றுக்கொண்டால் , பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலரை உயர்ந்தவர்களாகவும், சிலரை தாழ்ந்தவர்களாகவும் அவர் நினைக்கிறார் என்று அர்த்தம். அது கிறிஸ்தவத்திற்கு எதிரானது .
ஜாதி அமைப்பு முறைகள் வருணாசிரமகொள்கைகளையும், சனாதனதர்ம முறைகளையும் அடிப்படையாக கொண்டது. இது இரண்டுமே ஹிந்து மத நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது. இப்போது நீங்கள் ஜாதி அமைப்பு முறைகளை நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் கிறிஸ்தவரா?