@Bro.Chandruparkulan
உண்மைதான் சகோ . ஆனால் அதையும் கடந்து வேறு ஏதாவது குணாதிசயம் அவருக்கு கிடைத்ததா என்பதுதான் கேள்வி .
//இதோ, மனுஷன் நம்மில் ஒருவரைப்போல் , நன்மை தீமை அறியத்தக்கவனாய் ஆனான். //
என்று வசனம் இருந்திருந்தால் , நன்மை தீமை அறிவு பெற்றதோடு முடிந்திருக்கும் .
ஆனால் வசனம் கீழுள்ளவாறு உள்ளது.
//இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். //
"எனவே நம்மில் ஒருவரைப் போல் " என்பது கூடுதலான குணாதிசயம் ஆதாமுக்கு கிடைத்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
@:Sis.Arasi Aruldas ( I assume your are a female )
நீங்கள் கூறுவது போல் மிகவும் அதிக power கிடைத்திருக்கும் என்று எண்ணுவதற்கு நிறையவே இடமிருக்கிறது . ஏற்கனவே ஆதாமுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம் என்ற என் யூகத்தை இந்தக் கருத்துக் களத்தில் "ஆதாமின் தாலந்து "என்ற தலைப்பிட்ட ஒரு விவாதத்தில் கூறியிருக்கின்றேன். நேரம் கிடைத்தால் படித்துப் பார்க்கவும்.
@Bro.Vickyalpha
உங்களுடைய கருத்தும் ஏற்கத் தகுந்ததுதான். ஆனால்......
கடவுளுக்கு எதிராக முடிவெடுக்கும் தன்மையை மனிதன் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டானா ?
அதாவது கடவுள் , தனக்கு தானே எதிராக முடிவெடுக்கும் தன்மை பெற்று இருக்கிறாரா ?
(லூசிபர் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது)
எனக்கு புரிந்தவரை மனிதன்......
1. மகிழ்ச்சி , வருத்தம் , கோபம் , அன்பு , பொறுமை, பொறாமை போன்ற உணர்வுகளில் கடவுளைப் போல் ஆனான் .
2. Knowledge , wisdom , vision , attitude , போன்ற அறிவுடைமை களில் கடவுளைப் போல் ஆனான்.
3.Creativity , imagination , execution , ruling , warring போன்ற ஆளுமைகளில் கடவுளைப் போல் ஆனான்.
4. ...........
(இந்தப் பட்டியலை நீட்டிக்க விரும்பினால் நீட்டிக்கலாம்)
மொத்தத்தில் தன்னுடைய சாயலைப் போன்றே மனிதனை படைத்துவிட்டு , தன்னுடைய குணாதிசயங்களையும் ( ஒரு குறிப்பிட்ட percentage ஐ ) மனிதனுக்கு கொடுத்து அவனை முழுமையாக ஆக்கினார் என்றால் மிகையாகாது.