வேதத்தை வாசிக்கும் பொழுது பல வசன பகுதிகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக....
வன்முறை ( வேதம் நியாயப்படுத்தும் கொலைகள் , அடிமைத்தனம் போன்றவை)
காலத்திற்குப் பொருந்தாதவை (பலதார மணம் , பலியிடுதல் போன்றவை)
விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்துக்கள் (அஸ்திவாரத்தின் மேல் பூமி நிற்பது ,மலை மீது ஏறி நின்று பார்த்தால் சகல ராஜ்ஜியங்களும் தெரிவது போன்றவை)
முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் (யோவான் 5:31 v/s யோவான் 5:14)
அதிர்ச்சியூட்டும் கருத்துக்கள்( லூக்கா 12:51)
நடைமுறை சாத்தியமில்லாதது (அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுப்பது , கண்களை பிடுங்குவது, கைகால்களை தறித்துக் கொள்வது போன்றவை)
இன்னும் பிற......
இவற்றையெல்லாம் காலங்காலமாக கேட்டு ஜீரணித்துக் கொண்ட நமக்கு , இவைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவதில் சிரமம் இருப்பதில்லை....
ஆனால் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் இவற்றை வாசிக்கும் பொழுது , அவைகள் அவர்களுக்கு கண்டிப்பாக நெருடலாக இருக்கின்றது.( சில சமயம் நமக்கே நெருடலாக இருக்கிறது என்பது வேறு விஷயம்)...
இந்தமாதிரி சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது ..கையாள்வது..?