இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த பலவிதமான யூகங்களும் விவாதங்களும் தீர்க்கதரிசனங்களும் கருத்துக்களும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன . ஆனால் ஒரு விஷயம் திட்டமாக தெரிகின்றது ...அது என்னவென்றால் வருகை தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது.
இந்த தாமதத்திற்கு வேதம் சொல்லும் விளக்கம் என்னவென்றால் "எல்லோரும் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் தாமதம்"...(2 பேதுரு 3:9)
ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இயேசுகிறிஸ்துவிற்கு , இரண்டாம் வருகை எப்பொழுது என்பது பற்றி எதுவும் தெரியாது
பிதாவுக்கு மட்டும்தான் தெரியும் .... வேதம் அப்படித்தான் சொல்லுகிறது.( மாற்கு 13:32)
ஆக , பிதா சொல்லாமல் இயேசுகிறிஸ்து பரலோகத்தில் இருந்து கிளம்ப முடியாது.
சரி .....கிளம்பி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது .....அவனவனுடைய கிரியைக்கு தக்கவாறு பலனை அவர் தம்முடனே கூட கொண்டு வருவார்.... என்று வேதம் கூறுகிறது. ( வெளி 22 :12 )
ம்........அது என்ன பலன் ?