8 வழிக்குப் பையையாகிலும்,அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும்,எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்.
மாற்கு 6:8
9 பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும்,இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
மாற்கு 6:9
ஊழியம் செய்ய போகிறவர்களை பற்றி வசனம் இப்படி சொல்வதாய் இருக்கும் போது, இன்றைய பாஸ்டர்கள் கோட்சூட் உடைகளுடனும், சொகுசு கார்களிலும், rev doctor பட்டங்களுடனும், முகம் முழுக்க மேக்கப்புடனும் அலைவது ஏன்??
உங்கள் தேவைகளை பிதா ஒருவருக்கே தெரிவியுங்கள் என்று வசனம் போதிக்கும் போது, இன்றைய பாஸ்டர்கள்(போதகர்கள்) காரணங்களை சொல்லி வீடு வீடாக சென்று(டிவி வழியாக) பிச்சை எடுப்பது ஏன்
ஏசு, பவுல் வாழ்ந்து காட்டிய கிறிஸ்தவத்தின் பாதையை இன்று இவர்கள் சிதைத்து அதை ஒரு கேலிப்பொருளாய் மாற்றிய காரணம் என்ன??
வரிவரியாய் பைபிள் படிப்பதாக சொல்லும் விசுவாசிகளின் கண்களுக்கு பாஸ்டர்களின் தவறுகளை ஒப்பிட்டு பார்க்ககூடாமற் போனதென்ன