நம்பிக்கை என்பது ஒரு நல்ல விஷயம்.எல்லா சமயங்களும் இதை தங்களுக்கு சாதகமாக வளர்க்க முற்படுகின்றன. சொல்லப்போனால் சமயங்களின் அடிப்படையே நம்பிக்கைதான்.
ஆனால் , அளவற்ற , எல்லையற்ற நம்பிக்கை , அதாவது ' விசுவாசத்தை 'மேலோங்க செய்வது கிறித்தவத்தின் முதன்மையான செயல்பாடாக இருக்கிறது.
பெரிய மீனின் வயிற்றில் யோனா மூன்று நாள் இருந்தான் என்றிருப்பதற்கு பதிலாக , யோனாவின் வயிற்றில் பெரிய மீன் 3 நாள் தங்கியிருந்தது என்று எழுதியிருந்திருக்குமேயானால் கூட அதை விசுவாசிகள் எளிதாக நம்பியிருப்பார்கள். அந்தளவிற்கு விசுவாசம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கண்மூடித்தனமான நம்பிக்கை முன்னேற்றத்தை முடக்கும். சிந்தனையுடன்கூடிய நம்பிக்கை நன்மை பயக்கும்.
இது அறிவியலுக்கும் பொருந்தும்.