ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27 :46
ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15 :34
ஆமாம்......பிதா , குமாரனை ஏன் கைவிட்டார் ?
இயேசு கிறிஸ்து பாடுகளை அனுபவிப்பதற்காக ?
பாடுகளை அனுபவிப்பதற்காக , பிதா , யோபுவை தாற்காலிகமாக கைவிட்டதைப்போன்றுதான் இதுவுமா ?
வேறு ஏதாவது விளக்கம் உண்டா ?
முக்கியமான கேள்வி ....
நாமும் பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக , பிதா , இதேபோன்று நம்மையும் அவ்வப்போது கைவிட்டு பிறகு கைதூக்கி விடுகிறாரா ?