Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Arockya paul

Pages: [1]
1
;)*ஆவியில் எளிமையாயிருத்தலுக்கு* சிறந்த மாதிரி இயேசுவே (2 கொரி 8:9)
அவர் பரலோகத்தில் தமக்கிருந்த அனைத்து மகிமையையும் துறந்து தம்மைத்தாமே வெறுமையாக்கி இவ்வுலகுக்கு வந்தார்.ஆவியில் எளிமையாயிருத்தல் ஆசீர்வதிக்கபட்ட இரகசியம் கிறிஸ்துவின்நிமித்தமாக ஒருவன் தன்னைத்தானே வெறுமையாக்குவதேயாகும்.
என் அண்ணன் பரிசுத்த புனித அப்.பவுல் இந்த உண்மையை கண்டறிந்த போது அவர் தன்னைத்தானே வெறுமையாக்கி தன் மேன்மைகளை குப்பையாக எண்ணினார்(பிலி 3:7,8)
நாம் நம்மை வெறுமையாக்கி நம்மை நாமே பிரதிஷ்டை செய்திருப்போமாயின் நமக்கு மிக அருமையான ஏதோ ஒன்று திடீரென்று நம்மை விட்டு எடுக்கப்பட்டு போனாலும் தேவனோடுள்ள நமது நெருங்கிய நடக்கை எவ்வித்தத்திலும் தடைபடாது;
நாம் நமது சமாதானத்தை இழக்கவோ கலக்கமடையவோ மாட்டோம்.நமக்குண்டான எரலாவற்றையும் நாம் வெறுமையாக்கிவிட்டோம் அல்லது பிரதிஷ்டை செய்துவிட்டோம் என்பதற்கு இதுவே போதுமான நீரூபணமாயிருக்கும்!!!
இப்பொழுது உங்களுக்குள்ள அனைத்தையும் நீங்கள் வெறுமையாக்கியிராவிடில் ஒருநாள் இவ்வுலகை விட்டு நீங்கள் பிரியவேண்டிய வேளை வரும்போது உங்களை வெறுமையாக்கிக்கொண்டு இவ்வுலகை விட்டுச்செல்வது உங்களுக்கு மிக கடினமாயிருக்கும்
________________________________சிலுவையைப்பற்றிய உபதேசம்________

2
**** Valentine's DAY BIGGEST WEAPON OF SATAN~!!!!! DANGER DANGER!!!! ---*****
பழைய பதிவு ஆனாலும் திரும்ப இங்கே வெளியாக்கப்படவேண்டிய பதிவு

சிலுவையை பற்றிய உபதேசம்:-

உண்மையான அன்பு தேவனின் அன்பு மட்டும் தான்  தேவனுடைய அன்புடன் ஒப்பிடும்போது காதல் என்பதும் உண்மையான அன்பு அல்ல.

#ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு சொன்னார். விபசாரம் என்பது திருமணத்துக்குப் பின், வேசித்தனம் என்பது திருமணத்துக்கு முன் பாலியல் பாவம். உங்கள் சரீரங்களை வேசித்தனத்திற்கு ஒப்புக்கொடாதிருங்கள். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் குற்றமற்றதாய் காணப்படுவதாக என்று வாசிக்கிறோமே.

#அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. இது ஒரு முக்கிய காரணம். பழைய ஏற்பாட்டில் "சேத்" சந்ததி தேவ புத்திரர் என்று அழைக்கப்பட்டார்கள். காயீன் சந்ததி மனுஷ குமாரர் என்றழைக்கப்பட்டார்கள். தேவபுத்திரர் மனுஷகுமாரர்களின் பெண்கள் அழகுள்ளவர்களாயிருந்தபடியால் அவர்களை பெண்கொண்டார்கள். அதன் பின் வந்த சந்ததியின் பாவம் திரளாயிருந்ததால், தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார்.

II கொரி 6:17,18
17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

#காதல் என்பது உண்மையான அன்பு அல்ல, அது சில வரம்புகளுக்குட்பட்டது, தேவனுடைய அன்பு மட்டும் உண்மையானது, இவ்வுலகிலும், விண்ணுலகிலும்!

#எனவே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல் இருப்போமாக. மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
காதல் என்பது ஒரு வித வலை. அது அவர்களை பெத்து வளர்த்த பெற்றோர்களின் கையை விட்டு விலக்கி, படிப்பையும் பட்டத்தையும் ஒரு பொருட்டாக எண்ணி அவர்களை சிந்திக்க விடாமல் எதிர்காலத்தில் உள்ள ஆசீர்வாதமான பேரின்பத்திற்குள் அவர்களை நுழையவிடாமல் சிற்றின்பத்தில் சிக்க வைக்கும் அந்த வலை தான் காதல்.
அதை, கடவுளாக பார்க்கும் வாலிபம், இன்று அதை விக்கிரகமாக்கி அதை தொழுகிறபடியினால், இரண்டாம் கட்டளையிலேயே விழ வைத்து நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மெய் அன்பை விட்டே பிரிக்கத் துடிக்கும் கண்ணி தான் காதல்.
பெற்றோர்களின் ஆசை விருப்பங்கள், கனவுகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டு தன்னுடைய வாலிப வயதில் குடும்பம் என்றால் என்ன? என்று தெரியாத சூழ்நிலையில் அந்த காதலோடு கைகோர்த்து, இன்று சிக்கலில் இருக்கும் அநேகர் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்..
வெற்றி பெற்ற காதலர்கள், திருமணத்திற்குப் பின் அவர்கள் அநேகரின் கதறல்கள் எங்கள் உள்ளத்தை தொட்டபடியினால், வேண்டாம் அது உங்களுக்கு வேண்டாம்.
என்றுரைக்கும் வார்த்தைகளை கேளுங்கள்.
காலம் முழுவதும் வேண்டாம் அந்த சிறை…..
என்றும் விடுதலையோடு தேவனை ஆராதித்து தேவன் உனக்கென உன் எலும்பிலிருந்து உருவாக்கி உன் கண்முன் கொண்டுவருகிற அந்த ஏவாள் போதும் என்ற நல்ல மனதுடன் இருப்பாயா?
ஏவாளே! கர்த்தர் கரத்திற்குள் அடங்கியிரு. ..
#உன்னை பராமரிக்க அன்பு செலுத்த உன்னுடைய ஆதாமிடத்தில் தேவன் உன்னை கொண்டு நிறுத்துவார்.
தேவன் செய்கிற வேலையை தேவன் செய்யட்டும். நீங்கள் அதை செய்ய முற்படுவீர்களானால் தோல்வி நிச்சயம்.
நானும் என் வீட்டாருமோ என்றால் கர்த்தரையே சேவிப்போம்.
திருமணபந்தம் மனித திட்டம் அல்ல. தேவனால் நியமிக்கப்பட்டது. ஆதி 2:18-24
#உண்மையில்லாத நடக்கை திருமண வாழ்வை சிதைக்கும். மத் 5:32
திருமணம் பந்தத்தில் அன்பு கூறுதலும், கீழ்படிதலுமே பார்க்கவேண்டும். கவர்ச்சி அல்ல எபே 5:21-33
திருமண வாழ்வின் எல்லைக்கு வெளியே கொள்ளும் பாலுறவுகள் பாவம் எபி 13:4
திருமணம் கிறிஸ்துவுக்கும் சபைக்கும் நிழலுருவம். எபே 5:23,24
அது கனமுள்ளது…..
அது பரிசுத்தமுள்ளது...

#விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபி-13:4
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்..!!

Pages: [1]