My Community
General Category => Tamil Bible => Topic started by: Vickyalpha on October 09, 2018, 08:38:13 AM
-
இன்று டைனோசர்களின் எலும்பு படிமங்கள் உலகமெங்கும் பரவலாக கிடைக்கின்றன. ஆனால் பைபிளின் எந்த இடத்திலும் மனிதன் டைனோசர்களை சந்தித்ததாக நிகழ்வு ஏதும் வரவில்லை. லிவியதானை பற்றி குறிப்பிட்டாலும் அது திமிங்கலத்தை குறிப்பதை போலவே உள்ளது. எந்த இடத்திலும் மனிதர்களை டைனோசர்கள் கொன்றதாகவும் அல்லது மனிதர்களோடு இடைப்பட்டதாகவும் சொல்லப்படவில்லை. அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வாழ்ந்த , அவ்வளவு பெரிய மிருகத்தை பற்றி ஏன் பைபிளில் குறிப்பிடப்படவில்லை??
-
ஆதியாகமம் 1ம் அதிகாரம்..... 1ம் வசனத்திற்கும் 2ம் வசனத்திற்கும் இடையே பல லட்சக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடி விட்டதாக சில வேதாகம ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர் . இந்த காலகட்டத்தில்தான் டைனோசர்கள் போன்ற பல அரிய உயிரினங்கள் வாழ்ந்ததென்றும் , தேவலோகப்போர் ஒன்று நடை பெற்றதாகவும் , அப்போரில் இவைகள் அழிந்து விட்டதாகவும் கூறுகின்றனர் . இதே காலகட்டத்தில்தான் லுசிபர் (ஏதேன் தோட்ட சர்ப்பம் ) பூமியில் தள்ளப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதற்கு GAP THEORY என்று பெயர் . ( காயினின் மனைவிகூட இந்த காலகட்டத்திலிருந்து வந்தவர்தானோ ? )
இந்த காரியங்களை கடவுள் வேதாகம எழுத்தாளர்களுக்கு வெளிப்படுத்தாமைக்கு காரணம் , மனிதன் , தான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பம் ஆனவன் என்று கருதவேண்டுமென்றுதான்...
மேற்கூறியவற்றை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம் .
-
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் சூரியன் நான்காம் நாள் வேறு பிரிக்க பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இன்றைய கால அளவு 24 மணிநேரம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. முதல் மூன்று நாள் என்பவை பல மில்லியன் ஆண்டுகளாக கூட இருக்கலாம். அந்த ஒரு நாள் கணக்கு பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருந்து கணக்கிட வேண்டும். அறிவியலாளர்கள் டைனோசர்களின் காலம் before 231 to 241 million என கூறுகின்றனர். இந்த காலத்தில் டைனோசர் தோன்றி அழிந்து விட்டது என அறிந்து கொள்ளலாம்.
-
முதல் மூன்று நாட்கள் சூரியன் இல்லாமலேயே சாயங்காலமும் விடியற்காலமும் வந்து போகிறது. இதையும் கொஞ்சம் சரி செய்தால் நல்லது.
-
முதல் ஐந்து ஆகமங்களும் மோசே அவர்களால் எழுதப்பட்டது. அவற்றை பஞ்சாகமம் என்கிறோம். அதே மோசேசங்கீஒன்உண்டுசஙங்90. சங்:90:4,5,6. ல் காலை மாலை என்பது ஒரு துவக்கம் முடிவு என்பதையே குறிக்கிறது.தான்ஆதியயாகமத்திலும் சொல்லப்பட்டு இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னபடி வேதத்தின் மொழி நடை மிகவும் முக்கியமானது .
-
@:எனவே இன்றைய கால அளவு 24 மணிநேரம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு கணக்கிடப்பட்டது.
எப்பொழுதிலிருந்து இது நடைமுறையில் இருக்கிறது ?
@:முதல் மூன்று நாள் என்பவை பல மில்லியன் ஆண்டுகளாக கூட இருக்கலாம்.
மற்ற 4 நாட்களும் ஏன் பல பில்லியன் ஆண்டுகளாக இருக்கக்கூடாது ?
@:அந்த ஒரு நாள் கணக்கு பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருந்து கணக்கிட வேண்டும்.
பிரபஞ்சத்தின் மையப் புள்ளி எது ?
@:காலை மாலை என்பது ஒரு துவக்கம் முடிவு என்பதையே குறிக்கிறது
சரி செய்து விட்டீர்கள்....நல்லது .
-
@Reply 2
Anna mannikkavum. Appadi ellam illai. Piragu andha moondru nalukkum velicham eppadi vandhukondu irundhadhadhu.
Devan 4th day la irundhu vithiyasangalai undu pannugirar... Avlothan adhu. Adhai veenana sindhanaigal moolamaga thavaraga purindhu kolla vendam. Illaienil Bible oru thavarana kannottathil parka vaaipu irukkiradhu.
@Reply 3
Nalla kelvi.
.............................
Adhu Ellam irukkattum. Ippodhu dinosaurgalai pathi Bible la potta enna podalana enna. Neraya per Bible ah visuvasikkaradhey illai. Adhukkaga adhu poi endru agiduma. Dinosaur endra oru uyirinam irundhadhu ippodhu illai avvalavu thaney... Idhula vivadhikka enna irukku. Appadi Bible la illai endral Bible adharku mukkiyathuvam tharavallai endru vaithu kolvom.
-
@reply #6
:Ippothu dinosargalai pathi bible la pota enna podalanna enna ??
"வேத புத்தகம் தான் தேவனுடைய வார்த்தை. வேத புத்தகத்தை மிஞ்சிய அறிவு எதுவும் இல்லை" என்பதை கேட்டு வளர்ந்தவன் நான். எனவே நான் கற்றுக்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும் வேதத்தில் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும் போது சில விஷயங்கள் மிகவும் நெருடலாக உள்ளது.
: Neraya per bible la visuvasikarathe illa
இது போன்ற நெருடலான, சந்தேகத்துகிடமான விஷயங்களை கேட்கும் போது அதற்கு சரியான பதில் தர முயலாமல் , உங்களை போன்ற பெரியவர்கள் கிண்டலாய் தட்டிகழிக்கும் போது , என்னை போன்ற நிறைய பேர் 'பைபிள் என்பது அடிப்படைவாதிகளுக்கான ஒரு சமய புத்தகம்' என்று அவிசுவாசமடைகிறார்கள்.
@ bible atharkku mukkiyathuvam kodukkavillai endru vaithu kolvom
டைனோசர்களின் எலும்பு மாதிரிகள் பரவலாக உலகம் எங்கும் கிடைக்கிறது. பொதுவாக டைனோசர்களை CARNIVORSE(மாமிச உண்ணிகள்) , HERBIVORSE (தாவர உண்ணிகள்) என்று பிரிக்கின்றனர்.
இரண்டுமே அளவில் பெரியவை. ஒருவேளை மனிதன் வாழ்ந்த அதே காலத்தில் இவை வாழ்ந்திருந்தால் கண்டிப்பாக மனிதன் இவற்றால் கொல்லப்பட்டிருப்பான். அவன் விளை நிலங்கள் இவற்றால் மேயபட்டிருக்கும். அந்த கால ஈட்டி, வாள், அம்புகளை கொண்டு மனிதன் இவற்றை கொன்றிருக்க வாய்ப்பு மிக குறைவு. எனவே மனித குலத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இது இருந்திருக்கும்.
அப்படி இருக்கும் போது வேதம் இதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கும்.??
கொஞ்சம் யோசித்து பதில் சொல்லவும்.
மேலே @udaya கூறிய GAP THEORY கூட ஏற்றுக்கொள்வதை போல இருந்தது. உங்கள் கருத்து சுத்த அடிப்படைவாதமாக உள்ளது.
-
@சகோVicky
FYI
ஆதியாகமம் 1ம் அதிகாரம் 1ம் வசனத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைக்கிறார். 2ம் வசனத்தில் பூமி ஒழுங்கின்மையாய் இருக்கிறது.
Perfect ஆன தேவன் imperfect ஆக பூமியை படைத்தார் என்ற அவச்சொல் கடவுளின் மீது விழாமல் தடுக்கும் ஒரு முயற்சிதான் gap theory. இதற்காக உருவான gt ல் பிறகு டைனோசர் , 6ம் அதிகாரத்தில் காணப்படும் ராட்சதர் , காயினின் மனைவி என்று பல சேர்க்கைகளை செய்தார்கள்.
இது பார்ப்பதற்கு சரியானதாக தோன்றினாலும் , ஆபத்தான theory ஆகும் . அதாவது ஆதாமுக்கு முன்னரே பாவம் இருந்தது என்றாகிவிடும். அப்புறம் எல்லாம் collapse தான்.
-
@udaya brother
நான் படித்து புரிந்து கொண்ட gap theory:
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
இது முதல் வசனம்.
பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது.
இது இரண்டாவது வசனம்.
தேவன் எதையுமே படைக்கும் போது முழுமையாக, ஒழுங்காக தான் படைப்பார். அவர் ஒழுங்கின்மையாய் படைத்திருக்க வாய்ப்பில்லை. முதல் வசனத்தில் தேவன் படைத்த பூமி, இரண்டாவது வசனத்தில் ஒழுங்கின்மையாக போக காரணம், நடுவில் ஒரு மிக பெரிய காலகட்டம் இருந்து, அதில் ஏதோ ஒரு சம்பவம் நிகழ்ந்து, அதினால் பூமி ஒழுங்கின்மையாய் போனது என்று சொல்கிறார்கள். அந்த சம்பவத்தினால் தான் டைனோசர்கள் அழிந்தது என்றும் சொல்கிறார்கள்.
அந்த நிகழ்வு ஒருவேளை சாத்தான் வானத்தில் இருந்து பூமியில் தள்ளப்பட்டதாக கூட இருக்கலாம் அல்லவா?
ஏனெனில் ஆதாம் இருக்கும்போது , already சாத்தான் பூமியிலே தானே இருந்தான். எனவே அவன் தள்ளப்பட்ட நிகழ்வு இந்த 6 படைப்பு நாட்களுக்கு முன்னதாகவே நடந்திருக்க வேண்டும்தானே.
அப்படி பார்க்கும் போது gap therory ஓரளவு ஏற்றுக்கொள்ளகூடியது தானே brother?
-
@Reply 7
Magizhchi. Nan oru adippadaivadhiyagavey irukkiren.
Innondru. Bible oru encyclopaedia alla.
Neengal thedum ellam kidaippadharku. Appadi endral Bible la irukkiravaigal kidaikkavillai endral adhu poi endru agiduma.
Seri magizhchi. Idharku Mel ennal padhil alikka iyaladhu ena ninaikkiren.
Apparam kadaisiyaga naan periyavar ellam illai.
I am just 27 years old.
-
Vedha pudhagathai minjiya arivu edhum illai endru sollitu neengal andha arivai oppitu parka ninaippadhu sariya?
-
Iam just 25 years old brother. எனக்கு நீங்கள் பெரியவர் தான்.
-
:):):)
-
Brothers neenga renduperume ennavida romba Periyavanga. I'm just 18 years old.
-
@:reply#9
Gap theory யை ஏற்றுக் கொண்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை reply#8 ன் கடைசி பாராவில் கூறியுள்ளேன்.
-
ஆதாமுக்கு முன்னரே பாவம் இருந்ததுதானே @udaya brother.
ஆதாம் படைப்புக்கு முன்பே சாத்தான் இருந்தானல்லவா?
-
ஆதாமுக்கு முன்பே பாவம் இருந்த்தென்றால் அதற்கு கடவுள்தான் முழு பொறுப்பு. சாத்தானுக்கும் அவர்தான் முழு பொறுப்பு. அப்புறம் ஆதாமின் பாவம் கடவுளின் ஏற்பாடு என்றாகிவிடும் .அதைப் போக்க வந்த இயேசு கிறிஸ்து வின் மரணம் ஒரு செட் அப் என்றாகி விடும். மனிதனால்தான் இப்புவியில் பாவம் வந்த்து என்ற வசனம் பொய்யாகிவிடும். பிரச்சனை புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
-
கடவுள்தான் சாத்தானையும் படைத்தார். அப்படி என்றால் சாத்தான் பாவம் செய்ததுக்கும் கடவுள் தானே பொறுப்பு ? !!
சாத்தான் மூலமாய் பாவம் உலகத்தில் வந்தது என்றால், சாத்தானிடம் முதன் முதலில் பாவம் எங்கிருந்து வந்தது ??
ஒரே குழப்பமாக இருக்கிறதே !!
-
சகோ. ஒரு விஷயத்தை இங்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். சாத்தானைப் பற்றி பேச்சு செல்வதால் ,
சாத்தானுக்கும் லூசிபருக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். லூசிபர்தான் தீமையின் அடையாளம். சாத்தான் அல்ல.
2015 ம் வருடம் மே 19 அன்று , " சாத்தான் என்பவன் யார்" என்ற தலைப்பில் இதே கருத்து களத்தில் என்னுடைய புரிதலை பதிவிட்டிருக்கிறேன்.
முடியுமானால் அதை ஒரு glance செய்யவும்.
கருத்து பரிமாற்றத்தை தொடரலாம் .
-
@ : Reply#18
சாத்தானை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு கீழ்க்கண்ட வசனங்களை கவனிக்கவும் .
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே, கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். ஏசாயா - 45 : 7
உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? புலம்பல் - 3 : 38
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா - 55 : 11
தேவாகிய கர்த்தர் , வாயின் வார்த்தைகள் மூலமாக உலகைப் படைத்தார் என்று கூறும் வசனங்களையும் நினைவில் கொள்ளவும் .
யார் மூலமாக பாவம் வந்திருந்தாலும் , காரணர் அவரே . எதுவும் அவர் சித்தமே என்று எண்ணவேண்டியுள்ளது . ( ஆதாம் பாவம் செய்யப்போவதை தேவன் முதலிலேயே அறியவில்லையா ? தண்ணீரால் உலகத்தை அழித்தாலும் பாவம் போகாது என்பது , அழி்ப்பதற்கு முன்பே தேவனுக்கு தெரியாதா ? போன்ற கேள்விகளுக்கு , பதில் இதுவாக இருக்கலாம் }