My Community
General Category => Tamil Bible => Topic started by: Joshua jeyakani R on December 18, 2019, 12:12:55 PM
-
கடவுள் எதற்காக மனுஷனை சிருஷ்டிக்க வேண்டும்?
தாங்கள் ஏதேனும் சரியான பதில் வைத்துள்ளீர்களா? இருந்தால் அனுப்பவும் அல்லது இங்கு பதிவு செய்யவும்
ஏன் தேவ பக்தியுள்ள சந்ததி இந்த பூமிக்கு தேவை?
-
எனக்குத்தெறிந்தவரையில் இந்த ஒரு வசனம் தான் உள்ளது
அவர் ஒருவனையல்லவா சிருஷ்டித்தார் தேவ பக்தியுள்ள சந்ததி வரவேண்டும் என்றே...
தேவபக்தியில்லாதன் எவ்வாறு தேவனை விசுவாசிப்பான்..ஏனெனில் தேவன் மெய்யாகவே பூமில் வாசம் செய்யப்போகிறார்
-
ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்,
தேவன் துதியிலே பிரியப் படுகிறார்
எடு:சங்கீதம் 136,148,150 அதிகாரம் முழுதும்
-
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
ஏசாயா14:12,13,14,15
அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.எபிரேயர் 2:16
-
10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10
-
நீங்கள் கொஞ்சம் களிமண்ணை எடுங்கள், உங்களுக்கு பிடித்த உருவத்தில் அதை செய்யுங்கள்.
இப்பொழுது அந்த களிமண் "என்னை ஏன் இப்படி செய்தாய்" என்று கேட்கிறதா.!? அதைப்போல தான் மனுஷர்களும் தேவனுடைய கிரியைகளை கேள்வி கேட்க கூடாது.
உங்களுக்கு சிந்திக்கும் திறன் இருந்தாலும்,பேசும் திறன் இருந்தாலும் உங்களால் கேட்க கூடாது.
-
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை துதிக்கும்படியாக நம்மை சிருஷ்டித்தார்
-
ஏற்கெனவே துதிகளின் மத்தியில் வாசமாயிருக்கும் கடவுளுக்கு மேலும் மேலும் துதிகள் தேவைப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு....தீங்கை உண்டாக்கிய தேவன் (ஏசாயா 45:7) , அதை நன்மையுடன் கலந்து பார்க்க முடிவெடுத்திருக்க கூடும்.....எனவேதான் , இரண்டும் கலந்த உருவாக்கிய மனிதனை இன்று வரை அவர் முற்றிலுமாக அழிக்கவில்லை !!!
-
5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை. நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
ஆதியாகமம் 2
-
வெளி:12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று
இவ்வாறாக மூன்றிலொரு பங்கு என்னும் பெரிய கூட்டம் வானத்தில் இருந்து தள்ளப்பட்ட காரணத்தினால்
வானத்தில் ஒரு குறைவு உண்டாயிற்று. அதை நிறைவு படுத்தவே தேவன் மனிதனை உண்டாக்கினார்
-
வெளி:12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று
இவ்வாறாக மூன்றிலொரு பங்கு என்னும் பெரிய கூட்டம் வானத்தில் இருந்து தள்ளப்பட்ட காரணத்தினால்
வானத்தில் ஒரு குறைவு உண்டாயிற்று. அதை நிறைவு படுத்தவே தேவன் மனிதனை உண்டாக்கினார்
-
வெளி:12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று
இவ்வாறாக மூன்றிலொரு பங்கு என்னும் பெரிய கூட்டம் வானத்தில் இருந்து தள்ளப்பட்ட காரணத்தினால்
வானத்தில் ஒரு குறைவு உண்டாயிற்று. அதை நிறைவு படுத்தவே தேவன் மனிதனை உண்டாக்கினார்
-
So we are convinced that every detail of our lives is continually woven together to fit into God’s perfect plan of bringing good into our lives, for we are his lovers who have been called to fulfill his designed purpose.
-
For he knew all about us before we were born and he destined us from the beginning to share the likeness of his Son. This means the Son is the oldest among a vast family of brothers and sisters who will become just like him.
Romans 8:28-29 TPT