My Community
General Category => Tamil Bible => Topic started by: udaya on September 28, 2019, 11:53:47 AM
-
இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த பலவிதமான யூகங்களும் விவாதங்களும் தீர்க்கதரிசனங்களும் கருத்துக்களும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன . ஆனால் ஒரு விஷயம் திட்டமாக தெரிகின்றது ...அது என்னவென்றால் வருகை தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது.
இந்த தாமதத்திற்கு வேதம் சொல்லும் விளக்கம் என்னவென்றால் "எல்லோரும் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் தாமதம்"...(2 பேதுரு 3:9)
ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இயேசுகிறிஸ்துவிற்கு , இரண்டாம் வருகை எப்பொழுது என்பது பற்றி எதுவும் தெரியாது
பிதாவுக்கு மட்டும்தான் தெரியும் .... வேதம் அப்படித்தான் சொல்லுகிறது.( மாற்கு 13:32)
ஆக , பிதா சொல்லாமல் இயேசுகிறிஸ்து பரலோகத்தில் இருந்து கிளம்ப முடியாது.
சரி .....கிளம்பி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது .....அவனவனுடைய கிரியைக்கு தக்கவாறு பலனை அவர் தம்முடனே கூட கொண்டு வருவார்.... என்று வேதம் கூறுகிறது. ( வெளி 22 :12 )
ம்........அது என்ன பலன் ?
-
1000 கோடி மடங்கு சந்தோசத்தை தரக்கூடிய பரிசு........ என்னவாக இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்த்தால்... மிக வியப்பாக இருக்கிறது.... அதேசமயம் மனிதன் தரக்கூடிய தண்டனையை விட 1000 மடங்கு தண்டனை ?.... ஏற்கனவே மரணதண்டனை தான் மனிதன் தரக்கூடிய அதிகபட்ச தண்டனை.... அதைவிட ஆயிரம் மடங்கு கடுமை... எப்படி இருக்கும் ?....
-
ஒருவன் நன்மையும் தீமையும் செய்திருந்தால் அவனுக்கு ஆசீர்வாதமும் தண்டனையும் இரண்டுமே கிடைக்குமா?
அதாவது பரலோகத்திற்கு நரகத்திற்கும் மாறி மாறி செல்ல வேண்டியது இருக்கும் ?
-
மத்தேயு வில் கூறியபடி அத்தியாவசிய மரம் துளிர்விடுவது 1948 சந்ததி 70 வருடம் 1948+70 : 2018: சங்கீதம் 90:10 ன் படி பார்த்தாலும் 70+10: 80 வருடம் . ஆக 2018+10=2028
இந்த கடைசி 10 ல் 7 வருடம் உபத்திரவக்காலம் . இதில் இன்று ஒரு வருடம் முடிந்து விட்டது. இன்னும் 2:1/2 ஆண்டுகளுக்குள் எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்க வாய்ப்பு உள்ளது . வருகை 2028 ல் இருக்க வாய்ப்பு .
-
Bro..Mohan Alex...
ஒரு வியப்பான கணக்கீட்டுதனை கூறியிருக்கிறீர்கள். 1948 என்று ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அது என்ன கணக்கு 1948.........?
இயேசு கிறிஸ்துவுக்கு கூட தெரியாத அந்த இரண்டாம் வருகையின் காலத்தை , 2028 என்று கணித்திருக்கிறீர்கள் .....மிக வியப்பாக இருக்கிறது.....
உங்கள் கணிப்பின் ஆதாரத்தை தெரிந்துகொள்ளலாமா ? கொஞ்சம் சொல்லுங்களேன்.....
( பின்குறிப்பு : யெகோவாவின் சாட்சிகள் கூட இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை கணிப்பதை விட்டுவிட்டார்கள் )