My Community
General Category => Tamil Bible => Topic started by: Jasmine mary on March 31, 2018, 08:40:39 AM
-
இயேசு ஞானஸ்நானம் பெற்ற பின் எங்கே சென்றார்.
எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இயேசு ஞானஸ்தானம் பெற்றபின் அவர் புத்தமதம் கற்க சென்றார் என்கிறார்கள்
விளக்கம் தாருங்கள்
-
இயேசுவுக்கும் புத்தமதத்திற்கும் என்ன சம்பந்தம்?
-
வனாந்தரம் என்றுள்ளது. 40 நாள் வேறு எங்கு போகமுடியும். உங்களுக்கு அவசியம் தெரியவேண்டுமெனில் ஞானஸ்நானம் எடுத்து வனாந்தரம் போய்பாருங்கள்
-
மாற்கு, Chapter 1
9. அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
11. அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டு மிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
ஞானஸ்நானம் பெற்ற பின்பு அவர் வனாந்திரத்திற்கு கொண்டு போக பட்டர் என்றும் தேவ தூதர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள் என்றும் வசனம் தெளிவாக உள்ளது
-
இந்த app LA எசேக்கியேல் 22 அதிகாரம் : 26வசனம் இல்லை