My Community
General Category => Tamil Bible => Topic started by: udaya on May 10, 2015, 06:28:46 AM
-
சாத்தான் என்பவன் யார் ?
சாத்தான் தேவனாகிய கர்த்தரின் பணியாளன் . சாத்தான் என்பது ஒருவனின் பெயரல்ல . அது ஒரு குறிப்பிட்ட பணியை செய்பவனைக் குறிக்கும் . உதாரணமாக , driver , teacher ,doctor போன்றவை அந்தந்த பணி செய்பவரை குறிப்பது போல சாத்தான் என்பதும் ஒரு பணியாளனைக் குறிக்கும் .
சாத்தானின் பணி என்ன ?
மானிடர் மேல் குற்றம் சுமத்தி அவர்களது செயல்பாடுகளை கர்த்தரின் கவனத்திற்கு கொண்டு வருதல் . குற்றம் குறைகளை கண்டு பிடித்தல் .
இப்பதவி சற்றேறக்குறைய public prosecutor பதவிக்கு ஒப்பானது .
சாத்தானின் அதிகாரம் என்ன ?
சாத்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது . கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்ய வேண்டியதுதான் அவன் கடமை. கீழ்ப்படிந்து நடப்பது மிகஅவசியம் . பாரபட்சம் இன்றி செயல்படவேண்டும் .
கர்த்தர் சாத்தானை ஏன் பணியமர்த்தினார் ?
கர்த்தர் , தன்னுடைய புனிதம் மற்றும் மகிமையும் , தான் உருவாக்கிய தீமையும் சரியான விகிதத்தில் மனிதர்களிடத்தில் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக உருவாக்கிய ஏற்பாடுதான் சாத்தான் . நன்மை-தீமை விகிதாச்சாரம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் . உதாரணமாக கொடூரனுக்கு அது 0:100 என்றால் , இயேசு கிறிஸ்துவுக்கு 100:0.
சாத்தானின் எல்லை எது ?
பூமி அவனது எல்லை. பூமியின் நிர்வாகியான சாத்தானுக்கு " உலகத்தின் அதிபதி "என்ற ஸ்தானத்தையும் கர்த்தர் வழங்கியிருக்கிறார் . இயேசு கிறிஸ்து உட்பட அனைவரும் அவனால் சோதிக்கப்பட வேண்டுமென்பது கர்த்தரின் நியமனம்.
கூடுதல் விவரம் :
சாத்தானின் வேலையை மனிதன் செய்தாலும் அவன் சாத்தான்தான் . (அதாவது தாற்காலிக சாத்தான்) . இயேசு கிறிஸ்து பேதுருவை கடிந்துகொண்டது இந்த வகைதான் . மற்றவர்களை குற்றப்படுத்த வேண்டாம் என்று பைபிள் போதிப்பதுவும் இதன் காரணமாகத்தான் .
சாத்தானுக்கு கொடுக்கப்பட பணியின் தன்மை , அவனுக்கு கெட்ட பெயரை மக்களிடம் ஏற்படுத்தியது . மக்கள் அவனை வெறுக்க ஆரம்பித்தனர் . பாதிக்கப்பட்டவர்கள் அவனை தீயவனாக உருவகிக்க தொடங்கினர் . அவன் எப்போது ஒழிவான் என்று காத்திருந்தனர் .இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலம் சாத்தானின் தலையை நசுக்கினார் என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொண்டனர்.
சாத்தானின் முடிவு :
சாத்தானுக்கு முடிவு கிடையாது . பணி மாறுதல் செய்யப்பட்டு 1000 வருடங்கள் அவன் பாதாள உலகம் செல்ல வேண்டியிருக்கும் .அது எப்போது ?
ஏரேமியா 31:31-34. , எபிரேயர் 8:8-12 பகுதிகளில்
இந்த காலம் சொல்லப்பட்டிருக்கிறது .
எனவே இயேசு கிறிஸ்துவின் போர் வீரர்கள் , சாத்தானை கண்டு பயப்பட வேண்டியதில்லை .பயப்பட்டு பயனில்லை . அவனுடன் போர்புரிய அவசியமில்லை .
சாத்தானை வணங்குபவர்களுக்கும் அவன் எந்த ஒரு சலுகையும் அளிப்பதில்லை .
பொதுவாக சொல்லவேண்டும் என்றால் , சாத்தான் ஒரு கொசுக்கடி.
-
கொசுக்கடி !!!!! அருமையான உதாரணம்
-
இந்த கொசுவினால் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் .
-
Always talking about Satan try to come out of this topic
-
You say try? Ok I will.
-
Ok, let us talk HOLY SPRIT.
But I have one problem . I don't want to discuss HS , under the topic சாத்தான் என்பவன் யார் ?.
Also , I don't have enough knowledge on HS subject .
So , I encourage you to start a new thread " who is holy sprit ? ". Let us talk HOLY SPRIT there. You can help me understand HS better. Thank you.
-
சாத்தான் என்பவன் யார் அவன் பணி என்ற விளக்கம் தவறு போல் உள்ளது சரி எனில் வேதாகம அதிகாரத்தை தரவும்
-
ஆதீ 1:1க்கும் ஆதீ 1:2 க்கும் இடயில் சாத்தான் உருவானான் சாத்ததனின் தலைவன் லூசிபர்(முன்னால் வான தூதர்)மற்றும் சிலர் வானில் இருந்து தள்ளப்பட்டார்கள்
எசேக் 28:12.13.14.15.16.17.18
-
@: சாத்தான் என்பவன் யார் அவன் பணி என்ற விளக்கம் தவறு போல் உள்ளது சரி எனில் வேதாகம அதிகாரத்தை தரவும்.
வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் , நான் எழுதிய research paper இது.
தவறு என்று நீங்கள் கருதுவதை, குறிப்பாக கூறினால் விளக்கம் தருகிறேன் . நன்றி.
@: ஆதீ 1:1க்கும் ஆதீ 1:2 க்கும் இடயில் சாத்தான் உருவானான்
Gap theory ஐ கூறுகிறீர்கள் என்று யூகிக்கிறேன் .
A quick question :
" சாத்தான் உருவானான் " என்று கூறுகிறீர்கள் .
அவன் தானாக உருவானானா ? அல்லது வேறு யாராவது அவனை உருவாக்கினார்களா ?
@: சாத்ததனின் தலைவன் லூசிபர்(முன்னால் வான தூதர்)மற்றும் சிலர் வானில் இருந்து தள்ளப்பட்டார்கள்எசேக் 28:12.13.14.15.16.17.18
நீங்கள் கூறிய பகுதி தீரு ராஜாவை குறிப்பிடுகிறது .
சாத்தான் / லூசிபர் பற்றி கூறவில்லை .
மனுபுத்திரனே, நீ *தீரு ராஜாவை * க்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன், பூரண அழகுள்ளவன்.
எசேக்கியல் 28 :12
சாத்தானின் தலைவன் லூசிபர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் . சாத்தான் லூசிபரின் வேலையாள் என்று நினக்கிறீர்களா ?
-
Y can't
-
I have already demonstrated Lucifer = JC , elsewhere in this forum. Please go through it first. Please express your views on that demonstration.
-
சாத்தான் தேவனால் படைக்கப்பட்டவனா? அவன் தான் தள்ளப்பட்ட தூதனா? அவன் பறலோகத்திலா இருந்தான் ?
-
God had a predestined plan before He started creating the world. That we see in Eph 1:3 to 10. According to the predestined plan of the Lord we the people created by Him in His image and likeness must be blameless and defect less in loving Him. In order to select the people who are spotless He has to test us. But God will not test us by evil. So that He utilizes the services of the devil who is the father of lie. John 8:44. In Rev. 12:9 says who deceives the whole world. When we do not love the truth the only true God and obey so as to be saved He sends the power of error to work in us so that we believe the false. 2 these. 2:9,10,11,12. God is the one forming light and darkness. Isa. 45:7.
-
God had a predestined plan before He started creating the world. That we see in Eph 1:3 to 10. According to the predestined plan of the Lord we the people created by Him in His image and likeness must be blameless and defect less in loving Him. In order to select the people who are spotless He has to test us. But God will not test us by evil. So that He utilizes the services of the devil who is the father of lie. John 8:44. In Rev. 12:9 says who deceives the whole world. When we do not love the truth the only true God and obey so as to be saved He sends the power of error to work in us so that we believe the false. 2 these. 2:9,10,11,12. God is the one forming light and darkness. Isa. 45:7.
-
@: God had a predestined plan before He started creating the world.
Please tell me whether SIN is a part of his " predestined plan ".
If yes.....Adam was not accountable for the sin.
If no.......His " predestined plan " failed.
@: In order to select the people who are spotless He has to test us.
Test us ?!?!? Really ? God is not omniscient ? He is supposed to know the " test result " beforehand. Then that makes the test unnecessary !!!!!
@: But God will not test us by evil. So that He utilizes the services of the devil who is the father of lie.
So , devil works for God !!!!!! I wonder if he can do something of his own without Gods will. Anyway , you say , Devil is a servant of God !!!!!! When God want to do some unholy task , He ask devil to do it for him ?
@: John 8:44. In Rev. 12:9 says who deceives the whole world. When we do not love the truth the only true God and obey so as to be saved He sends the power of error to work in us so that we believe the false.
Adam didn't obey God. According to your reasoning " He sends the power of error to work in Adam so that he believed the false. "
@: God is the one forming light and darkness. Isa. 45:7.
AND. ..........
He is the one who created EVIL....Isaiah 45:7
-
@: SHAHMARKS
By the way , God asked devil to test Jesus Christ ....right ?
-
தீய ஆவி என்று உண்டா? இதுவும் சாத்தானும் ஒன்றா? ரொம்ப விசுவாசமான வீட்டிலும் தீய ஆவி பாடாய் படுத்துகின்றதே? ஏன்? வீடு முழுவதும் ஆண்டவரின் படங்கள் இருந்தும் எப்பொழுதும் ஜெபம் ஏறெடுத்துக் கொண்டிருக்கும் போதும் தீய ஆவி எங்ஙனம் வீட்டிற்குள் பிரவேசிக்கிறது? ஆண்டவரிடம் பயம் இல்லையா?
-
@: தீய ஆவி என்று உண்டா? இதுவும் சாத்தானும் ஒன்றா?
சாத்தானின் பல ஆயுதங்களில் தீய ஆவியும் ஒன்று.
@: ரொம்ப விசுவாசமான வீட்டிலும் தீய ஆவி பாடாய் படுத்துகின்றதே? ஏன்?
விசுவாசமான வீடு அவிசுவாசமான வீடு என்ற கணக்கெல்லாம் சாத்தானுக்கு கிடையாது.
யோபு புத்தகத்தை படித்துப்பார்த்தால் புரியும்.
@: வீடு முழுவதும் ஆண்டவரின் படங்கள் இருந்தும் எப்பொழுதும் ஜெபம் ஏறெடுத்துக் கொண்டிருக்கும் போதும் தீய ஆவி எங்ஙனம் வீட்டிற்குள் பிரவேசிக்கிறது?
படமும் ஜெமும் தீய ஆவியை தடுத்து நிறுத்தும் என்று நீங்கள் நம்ப காரணம் என்ன ?
@: ஆண்டவரிடம் பயம் இல்லையா?
எஜமான் என்ற விசுவாசம் உண்டு. பயம் எதற்கு ?
சரி.......
பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு கருத்து இதோ...
நமது இல்லங்களில் எழும் இன்னல்களுக்கு, தீய நிகழ்வுகளுக்கு , தீய ஆவிதான் காரணம் என்று காலகாலமாக நமக்கு போதிக்கப்பட்டு வருகிறது.
ஜெபம் செய்து தீய ஆவிகளை விரட்டுகிறேன் , என்று கூறி நம் வீட்டிற்குள் நுழையும் சுவிசேஷ ஊழியர்கள் , நம்மை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள , அவர்களுக்கு பயன்படும் சாதனம் " தீய ஆவி ".
பொறுமையோடும் , நம்பிக்கையுடனும் , விடாமுயற்சியுடனும் செயல்பட்டு இன்னல்களை இனங்கண்டு களைந்தெறிய முற்படுவர்களின் பார்வையில் ' தீய ஆவி ' என்பது ஒரு joke.....:-)
-
நன்றி! தீய ஆவிகளை எப்படி முறியடிப்பது/ஜெயிப்பது. கடுமையான கூட்டு ஜெபத்தில் கூட சில ஆவிகள் வெளியேர மறுப்பது / வெளியேறினாலும் திரும்ப வந்து தொந்தரவு செய்கின்றதே?
-
அசுத்த ஆவி பிரச்சனையை வேதாகம கண்ணோட்டத்தில் அணுகினால் , தீர்வு , மாற்கு 9:29 ல் கூறப்பட்டுள்ளது.
மாறாக....
மருத்துவ கண்ணோட்டத்தில் அணுகினால் , நிச்சயமான தீர்வை அடைய இயலும்.
-
.
-
@reply 8
எசேக்கியல் அதிகாரத்தில் தொடக்கத்தில் அவர் தீருவின் ராஜாவை குறித்து பேச தொடங்கினாலும், பின்பு அவனுக்குள் இருந்து அவனை நடத்தும் சாத்தானையும் கடிந்து கொள்ள தொடங்குகிறார். எனவே அது சாத்தானை குறிப்பதாகவே கருதுகிறேன் brother. ஏனெனில் அதில் உள்ள சில வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை.
He talk with the force behind the king.
-
எசேக்கியல் 28 ம் அதிகாரம் 3 உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது . அதில் முதல் 2 பிரிவுகள் தீரு ராஜாவுக்கான தீர்க்கதரிசனங்கள். இதில் சொல்லப்பட்டுள்ள வசனங்களைக் கொண்டு , தீரு ராஜா என்பது சாத்தானைக் குறிக்கிறது என்ற சிலர் நினைக்கின்றனர் . அது சரியல்ல என்பது என் கருத்து .
எசேக்கியல் 28 ம் அதிகாரம் 9,10 வசனங்கள் , தீரு ராஜா ஒரு மனிதன் என்று நிரூபிக்கிறது . சாத்தான் மனிதானாக இருந்திருந்தால் பூமியில் இருந்து பரலோகத்திற்கு போவதும் வருவதுமாக இருந்திருக்க முடியாது .(யோபு புத்தகத்தில் கூறியுள்ளபடி) காரணம்.....
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் - 3:13
ஆக தீரு ராஜா சாத்தான் அல்ல , ஒரு மனிதனே .
அடுத்து....
13 ம் வசனம்..........நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன் , என்ற வாக்கியம் , " தீரு ராஜா = சர்ப்பம் = சாத்தான் " என்ற கருத்தை ஆதரிப்பதாக நம்புகின்றனர் . அதுவும் பிழையே . காரணம்.....ஏதேன் தோட்டத்தில் , ஆரம்பத்தில் , ஆதாம் ஏவாளைத் தவிர வேறு மனிதர்கள் இருந்ததற்கான முகாந்திரம் எதுவுமில்லை .
ஏதேன் தோட்டம் என்றவுடன் ஆதாம் ஏவாள் பாவத்தை மட்டும் சொல்லிவிட்டு கடந்து போகிறோம் . தேவனாகிய கர்த்தர் மனிதனை அங்கிருந்து துரத்திவிட்ட பிறகும் ஏதேன் தோட்டம் அங்கேதான் இருந்தது என்பதை மறக்கக் கூடாது . ஆதாம் வெளியேறிய பிறகு , தீரு ராஜா அங்கு ஏன் இருந்திருக்கக் கூடாது ?
இருந்தாரா ? ஆம் , இருந்தார்.....ஏதேனைக் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப் ஆக இருந்தார். கீழ்க்கண்ட வசனத்தை கவனிக்கவும்
எசேக்கியல் - 28:14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன், அக்கினிமயமானகற்களின் நடுவே உலாவினாய்.
சரி.....
ஏதேனைக் காப்பாற்றுகிறதற்காக கர்த்தர் கேருபீன்களை நியமித்தாரா ? நியமித்ததை கீழ்க்கண்ட வசனம் உறுதி செய்கிறது .
ஆதியாகமம் - 3;24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
இப்படியிருக்க , தீரு ராஜா என்பது , சாத்தானைக் குறிக்க எந்த முகாந்திரமும் இல்லை . இந்தப்பகுதியில் கூறப்பட்டிருக்கும் , ஞானவான் , பூரண அழகுள்ளவன் போன்ற குணநலன்கள் தீரு ராஜாவுக்கு பொருந்தாது என்று கூற காரணம் எதுவுமில்லை . மேலும் வசனங்கள் கூறுகிறபடி அவர் பாவம் செய்திருக்கக் கூடும் .
@:ஏனெனில் அதில் உள்ள சில வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை.
எந்த வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை என்று கருதுகிறீர்கள் ?
@:He talk with the force behind the king.
He just talk ABOUT the king.
-
Brother நான் சொல்ல வருவதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
தீருவின் ராஜாவை நான் சாத்தான் என்று சொல்லவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால்
எசேக்கியல் தீருவின் ராஜாவிடம் காரியங்களை சொல்லும்போது , அவர் ராஜாவிடம் மட்டும் பேசாமல், ராஜாவின் உள்ளே இருந்து கிரியை செய்யும் சாத்தானை பார்த்தும் பேசுகிறார்.
உதாரணத்திற்கு இயேசு பேதுருவிடம் "பின்னாக போ சாத்தானே" என்று சொன்னப்பொழுது அவர் பேதுருவிடம் பேசாமல் , அவனுக்குள் இருந்த சாத்தானிடமே பேசினார் என்று புரிந்துகொள்ளலாம். அதே போல் இவர் ராஜாவிடம் பேசும்போது ராஜாவுக்குள் இருக்கும் சாத்தானிடம் சொல்வதுதான் எசேக்கியல் 28 : 12,13,14,15 வசனங்கள்.
இதே போன்ற ஒரு பதம் ஏசாயா 14: 12,13,14,15 வசனங்களில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதை காணலாம்.
" நீ அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்" என்று எசே 28:14 வசனத்தில் வாசிக்கிறோம். கேருபின்கள் பெரிய இறக்கைகளுடன் கூடிய சிருஷ்டிப்புகள்.
அவைகள் மனிதர்களை குறிப்பதில்லை.
தீருவின் ராஜா ஒரு மனிதன். அவன் இறக்கைகளுடன் கூடிய கேருபின் அல்ல. எனவே இந்த வார்த்தைகள் அவரை பார்த்து சொல்லப்படாமல் அவருக்குள் இருந்து கிரியை செய்த சாத்தானை பார்த்தே சொல்லப்பட்டிருக்கிறது.
இதுவே நான் புரிந்து கொண்ட விளக்கம் brother.
-
தீரு ராஜாவிடமும் ,
தீரு ராஜாவுக்குள் இருக்கும் சாத்தானிடம் பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் , என்று கூறுகிறீர்கள். சரி.....
2ம் வசனம் யாருக்கு சொல்லப்பட்டது என்று கூறமுடியுமா ?
ஏசாயா 14 : 12-15 ஐ குறிப்பிட்டருக்கிறீர்கள்.....
நேரடியாக சொல்லப்படும்
வசனங்களை உள் அர்த்தத்துடன் பார்க்க முற்பட்டால் ,
ஏசாயா 14 : 12-15 , இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கூட கூறலாம்.
இயேசு கிறிஸ்துதான் வானத்திற்கு
ஏறுவேனென்றும் மேகங்கள் மேல் வருவேனென்றும் உன்னதருக்கு ஒப்பாவேனென்றும் கூறினார் .(மத்தேயு 26 :64 )
தன்னை பிதாவுக்கு இணை படுத்தி பேசினார்.(மத்தேயு 28 :18, யோவான் 14 :9 )
ஜாதிகளை ஈனப்படுத்தினார் (மாற்கு 7:25-30).
வானத்தை விட்டு பூமிக்கு வந்தார்.மரித்து பாதாளத்தில் இறங்கினார் .
தன்னை விடிவெள்ளி என்றார்.(வெளிப்படுத்தின விசேஷம் 22 :16)
எனவே எசாயா 14:12-15 இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ?
நமக்கு போதித்தவர்கள் இது சாத்தானைக் குறிக்கிறது என்று கூறியதால் நாமும் அவ்வாறே வைத்துக் கொண்டோம் . அவ்வளவே.
-
13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது, நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 28:13
"நீ ஏதேனில் இருந்தவன்" ஏதேனில் சாத்தான் இருந்தானே brother.
-
சர்ப்பம் இருந்ததாகத்தான் வேதாகமம் கூறுகிறது. அதை சாத்தான் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறேன். இருப்பதை அப்படியே ஏன் எடுத்துக் கொள்ள கூடாது.
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
மத்தேயு 5
-
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்.....
என்ற வசனத்திற்கு reply#22 ல் ஒரு interpretationஐ கூறியிருக்கிறேன்.
-
@reply 26
2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:2
-
@reply 27
ஆதாம் ஏவாளுக்கு பிறகு ஏதேனுக்கு எந்த மனிதரும் வந்து ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது என்றுதான் கடவுள் கெருப்பீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் பாதுகாவலாக வைத்தார். அப்படி இருக்கும் போது தீருவின் ராஜா எப்படி ஏதேன் தோட்டத்தில் இருந்திருக்க முடியும்??
-
@:Reply#28
சர்ப்பம் சாத்தானா ? அல்லது சர்ப்பத்திற்குள் சாத்தானா ? உங்கள் கருத்து என்ன ?
@:Reply#29
@:ஆதாம் ஏவாளுக்கு பிறகு ஏதேனுக்கு எந்த மனிதரும் வந்து ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது என்றுதான் கடவுள் கெருப்பீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் பாதுகாவலாக வைத்தார்
அதைத்தான் எசேக்கியல் - 28:14 ல் ..நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப் ......என்று கூறுகிறார்.
மனிதன் எப்படி கேருப் ஆக இருக்கமுடியும் , என்று ஐயப்பட்டால், அது எசேக்கியல் - 28:14 எப்படி உண்மையாக இருககமுடியும் என்று கேட்பதற்கு சமம்.
இதுதான் "பகுத்தறிந்து ஏற்றுக் கொள்வது" என்பது....அதாவது பகுத்தறிவு . இந்த மனப்பான்மையை நான் வரவேற்கிறேன் . ஆனால் இந்த பகுத்தறிவு வேதத்தின் எல்லா பகுதியிலும் apply செய்யப்படவேண்டும் . Selective ஆக apply செய்வதுதான் பிரச்சனை .
@:தீருவின் ராஜா ஒரு மனிதன். அவன் இறக்கைகளுடன் கூடிய கேருபின் அல்ல.
சரி , அப்படியே வைத்துக் கொள்வோம்...
@:எனவே இந்த வார்த்தைகள் அவரை பார்த்து சொல்லப்படாமல் அவருக்குள் இருந்து கிரியை செய்த சாத்தானை பார்த்தே சொல்லப்பட்டிருக்கிறது.
அவருக்குள் இருந்து கிரியை செய்தது , "சாத்தான்தான்" என்ற முடிவுக்கு வர முகாந்திரம் என்ன என்பதுதான் கேள்வி....
தீருவின் ராஜாவை மனிதன் என்று declare செய்துவிட்டு.........." நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப்" என்ற வார்த்தகளை வாசிக்கும் பொழுது , தீர்க்கதரிசியின் வார்த்தைகளில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டாமல் , எதையாவது இடை சொருகி , தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உண்மைப்படுத்த முயற்சிக்கும் செயல் எத்தகையது ?
நான் உங்களை சொல்லவில்லை . இப்படி சொல்லி வரும் நம் இறையியலாளர்களை சொல்லுகிறேன் .
ஏன்.....கரத்தர் தீருவின் ராஜாவை கேருப் ஆக மாற்றியிருக்க முடிபாதா ? ஒரு வேளை அப்படி மாற்றி அதை தீர்க்கதரிசி வாயிலாக சொல்லியிருந்தாரென்றால் ..?
இந்த கோணத்தில் ஏன் சிந்திக்கக்கூடாது ?
-
அப்படியும் இருக்கலாம் brother. அல்லது நான் சொன்னபடியும் இருக்கலாம். தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எல்லாம் ஒவ்வொரு யூகங்கள் தான்.
ஒரே ஒரு வேதபுத்தகத்தை வைத்து கிட்டத்தட்ட 1700 வருடங்களாய், பல லட்சக்கணக்கான bible scholors, பிரசங்கிமார்கள், ஒவ்வொரு நூற்றாண்டின், ஒவ்வொரு நாளும், ஒரே வசனத்துக்கு புதிய புதிய அர்த்தங்களை எடுத்து இப்போது வரை பிரசிங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே புத்தகம் தான், அதே வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிச்சம். இன்றும் முடிவில்லாமல் தொடர்கிறது.
அதே போல் உங்களுக்கு ஒரு கண்ணோட்டம், எனக்கு ஒரு கண்ணோட்டம்.
எது சரியோ, அது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
-
@:ஒரே ஒரு வேதபுத்தகத்தை வைத்து கிட்டத்தட்ட 1700 வருடங்களாய், பல லட்சக்கணக்கான bible scholors, பிரசங்கிமார்கள், ஒவ்வொரு நூற்றாண்டின், ஒவ்வொரு நாளும், ஒரே வசனத்துக்கு புதிய புதிய அர்த்தங்களை எடுத்து இப்போது வரை பிரசிங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே புத்தகம் தான், அதே வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிச்சம். இன்றும் முடிவில்லாமல் தொடர்கிறது.
Brother ...... இதுதான் கிறிஸ்தவத்தின் உண்மையான பிரச்சனை ..... இப்படி ஆளாளுக்கு தனக்கு தோன்றியதையெல்லாம் சொல்லி , அதுதான் சரியென்று மற்றவர்களை நம்ப வைக்க முயற்சி செய்வதால்தான் நமக்குள் பல பிரிவுகள் , மறறும் உட்பூசல் ஏற்படுகிறது ......... நமக்கு சாத்தான் தேவையில்லை ! ! !
அன்றே , லுாக்கா ஆசிரியருக்கும் இதே சூழ்நிலைதான் ஏற்பட்டிருக்கிறது ......... லூக்கா - 1 ;1 - 4 வசனங்களைப் படித்தால் இது விளங்கும் .
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததாக குறிப்பிடுகிறார் ........ பகுத்தறிவு .
-
Romans 9 th chapter may help you all I think..
It's no a direct answer but can help a little bit to understand the lord's work.
-
இதற்கும் roman 9 ம் அதிகாரத்திற்கும் என்ன சம்பந்தம் brother? கொஞ்சம் விளக்கி கூற முடியுமா?
-
Neengal padithal puriyum endru ninaikkiren...
-
படித்தும் புரியவில்லை என்றுதான் உங்களிடம் கேட்கிறேன்.
கொஞ்சம் விளக்கி கூற முடியுமா உங்களால்?
-
Mannikkavum...
Ennudaya padhil reply # 14 Ku send pannadhu... Reply # tharama poitan....